வரி விதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நபரொருவர் தனக்குத் தானே
தீ வைத்துக் கொண்ட விபரீத சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
முல்தான் நகரைச் சேர்ந்த ஷஹ்பாஸ் அஹ்மட் என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழியாக ஓடியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவ்வழியாகச் சென்றவர்கள் அவரது உடலில் பரவிய தீயை மண்ணைத் தூவி அணைத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடும் எரிகாயங்களுக்குள்ளாகி உடலில் 80 சதவீதமான பகுதி எரிந்து கருகிய ஷஹ்பாஸ் அஹ்மெட்டின் உடல்நலம் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வரித் திணைக்களத்தால் அறவிடப்படும் வரிகளால் தான் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தனக்கு நீதி வழங்க அந்தத் திணைக்களம் தவறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியே அவர் மேற்படி தீக்குளிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முல்தான் நகரைச் சேர்ந்த ஷஹ்பாஸ் அஹ்மட் என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழியாக ஓடியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவ்வழியாகச் சென்றவர்கள் அவரது உடலில் பரவிய தீயை மண்ணைத் தூவி அணைத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடும் எரிகாயங்களுக்குள்ளாகி உடலில் 80 சதவீதமான பகுதி எரிந்து கருகிய ஷஹ்பாஸ் அஹ்மெட்டின் உடல்நலம் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வரித் திணைக்களத்தால் அறவிடப்படும் வரிகளால் தான் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தனக்கு நீதி வழங்க அந்தத் திணைக்களம் தவறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியே அவர் மேற்படி தீக்குளிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக