புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர்
தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும்
மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சில முகவரி
அற்ற இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எதுவித உண்மைத் தண்மையும் இல்லை
என சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் நஜீம் மடவளை நியுஸுக்கு
குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்ததாகவும் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தாகவும் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியதாகவும்,சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரீசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் இயர் போன்(புளுத் டுத்) இயங்கிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற போது தனது சட்டவிரோத செயற்பாட்டை மறைக்க மாணவி அபயக்குரல் எழுப்பியதாகவு ஏனைய பரீட்சாத்திகளும் குறித்த மாணவிக்காக பரிதாபப்படவில்லை எனவும் போலியாக செய்தி சித்தரிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன் வலயக் கல்வி பணிப்பாளர் என்ற வகையில் இது தொடர்பில் தான் விசாரித்த போது எந்த ஒரு பரீட்சை சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உற்பட்ட பரீட்ச்சை நிலையங்கள் எவற்றிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகவில்லை என குறிப்பிட்ட அவர் பொலிஸாரும் இது போன்ற ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என மறுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்ததாகவும் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தாகவும் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியதாகவும்,சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரீசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் இயர் போன்(புளுத் டுத்) இயங்கிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற போது தனது சட்டவிரோத செயற்பாட்டை மறைக்க மாணவி அபயக்குரல் எழுப்பியதாகவு ஏனைய பரீட்சாத்திகளும் குறித்த மாணவிக்காக பரிதாபப்படவில்லை எனவும் போலியாக செய்தி சித்தரிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன் வலயக் கல்வி பணிப்பாளர் என்ற வகையில் இது தொடர்பில் தான் விசாரித்த போது எந்த ஒரு பரீட்சை சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உற்பட்ட பரீட்ச்சை நிலையங்கள் எவற்றிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகவில்லை என குறிப்பிட்ட அவர் பொலிஸாரும் இது போன்ற ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என மறுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக