படிச்சிப்பாரு எல்லாம் தாருமாரு

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

அரசியல் கைதிகள் குறித்து ஒத்திவைப்பு வேளை பிரேரணை


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, 

பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பில் பின்வரும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை 2017, ஒக்ரோபர் 17 அன்று பி.ப.6.30 மணிக்கு பாராளுமன்றத்தின் ஒத்திவைப்பு வேளையில் சமர்ப்பிப்பதற்காக இத்தால் அறியத் தருகின்றேன். 

இந்தப் பிரேரணையானது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்குக் கிழக்கைச் சேர்ந்தவர்கள் பற்றியதாகும். 

விடயங்கள் பின்வருமாறு: 

(i) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவோ அல்லது இன்னமும் குற்றச்சாட்டுக்கள் வழங்கப்படாதவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன. 

(ii) இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும் அது காலத்துக்குப் பொருத்தமற்ற தென்பதும் இலங்கை அரசினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது. 

(iii) இந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை இலங்கை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது. 

(iv) இந்த நபர்களில் அனேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே என்பதோடு, அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது. இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. 

(v) அனேகமாக இவர்கள் எல்லோருமே அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காலத்தைப் போன்ற நீண்ட காலத்திற்குத் தடுப்புக்காவல் கைதிகளாகவே இருக்கின்றனர். 

(vi) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன. மிகவும் காத்திரமான இம் முக்கிய விடயத்திற்கு இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை. 

(vii) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தீய அம்சங்களுக்கும் புறம்பாக, மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) கிளர்ச்சிகளை மேற்கொண்ட வேளையில் கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 

இதேபோன்ற ஒரு கொள்கையை தற்போதுள்ள இந்தக் கைதிகள் விடயத்திலும் செயற்படுத்த முடியாமலிருப்பது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. 

(viii) இந்த வழக்குகள் முழுமையாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையென்பதாகக் கருத முடியாது. அரசின் முதன்மைச் சட்ட ஆலோசகர் என்ற வகையில் சட்டமா அதிபருக்குரிய கௌரவத்தை வழங்கும் அதேவேளை, இவ்வழக்குகள் அரசியல் அடையாளங்களையும் கொண்டிருப்பதனால் இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது. 

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால், கைதிகளாக உள்ளவர்களில் அனேகமானவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்க மாட்டாதென்பதும் அவர்கள் பயனுள்ள பிரஜைகளாக இருந்திருப்பார்கள் என்று கூறுவதில் நியாயமிருப்பதைத் தெரிவிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த விடயம் அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும். 

(ix) சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும். 

குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகள் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்மொழி பேசுபவர்கள் என்பதுடன், மற்ற நிர்வாக நீதிமன்றப் பாவனையில் உள்ள சிங்கள மொழியில் பாண்டித்தியம் இல்லாதவர்களாக இருக்கின்ற அதேவேளை, தமிழ்மொழிப் பாவனையில் உள்ள வவுனியா நீதிமன்றத்தில் இருந்து சிங்கள மொழிப் பாவனையில் உள்ள அனுதாரபுர நீதிமன்றத்திற்கு அவர்களுடைய வழக்குகள் மாற்றப்படுகின்றபோது, அவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கான அரசியலமைப்பு ரீதியான அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உரிமை என்பது அடிப்படையானது. அவருக்கெதிராக முன்வைக்கப்படவுள்ள வழக்கையும் சாட்சியங்களையும் முழுமையாகக் கேட்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் அவருக்குப் பூரண உரிமை உள்ளது. 

இவ்வாறாக வழக்கு இடம் மாற்றப்படுவதானது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தனது விருப்பத்தின் அடிப்படையில் சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்ற அதேவேளை, இது உள்ளடங்கலான ஏனைய அம்சங்களும் நீதியான ஒரு விசாரணை இடம்பெறுவதனை மறுதலிப்பதாக அமையும். முன்மொழியப்பட்டுள்ள இந்த வழக்கு இடமாற்றமானது குற்றஞ்சாட்டப்பட்ட நபரது அடிப்படை உரிமை சம்பந்தமாக எந்தவொரு அவதானிப்பையும் கருத்திற் கொள்ளவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றது. 

குறித்த இடமாற்றத்திற்கு எதிராக கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

இந்த நிலைமையானது அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும்.
 

அத்துடன், மேற்குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இக் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன். 

இரா.சம்பந்தன் 
பாராளுமன்ற உறுப்பினர் – திருகோணமலை
இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
Share:

மட்டக்களப்பு ஆலயம் ஒன்றில் வெங்கல குத்து விளக்கு கீழ் உள்ள நபரினால் திருடப்பட்டது





மட்டக்களப்பு கல்லடி #பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வெங்கல குத்து விளக்கு கீழ் உள்ள நபரினால் திருடப்பட்டது என உறுதியாக அடையாளம் காணப்பட்டது இவரது விபரம் அடையாளம் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து அறியத்தரவும் உங்கள் ஒத்துழைப்பு குற்றங்கள் திருட்டு மேலும் நடைபெறாமல் இருக்க பாதுகாக்கும் 0652055180
Share:

மட்டக்களப்பில் மற்றுமொரு தற்கொலை




மட்டக்களப்பில் மற்றுமொரு தற்கொலை நுண்கடன் மாயவலையிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் தமிழ் சமூகம்! (சந்திவெளியில்)
சந்திவெளி #பிரதேசத்தில் #குடும்ப #பெண் #ஒருவர் #தூக்கிட்டு #தற்கொலை.
நல்லதம்பி ஜெயசுதன் (29) என்பவரது மனைவியான செல்வம் யோகேஸ்வரி (26) என்ற இரு ஆண் பிள்ளைகளின் தாயே தற்கொலை செய்து கொண்டவராவார்.
கணவர் வெளிநாட்டில் இருக்கும்போது, அவருக்கு தெரியாமல் இங்கு 120000/= ரூபா தனியார் நிறுவனமொன்றில் கடனாக பெற்றுக்கொண்ட இவர், மாதாமாதம் கணவர் செலவுக்கு அனுப்பும் பணத்திலேயே கட்டிவந்துள்ளார்.
கட்டாரில் கம்பனி மூடியதால் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கணவர் நாடு திரும்பியதால், கடனை கட்டுவதற்கு முடியாமல் போன இவர்,
இன்று அதிகாலை வீட்டுவளையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
Share:

இந்தியன் சுப்பர் லீக் ஆரம்பம்

இந்தியன் சுப்பர் லீக் ஆரம்பம்





14.அக்டோபர். 2017 முதல் ஆரம்பித்துள்ளது இதில் 8 அணிகள் கொண்ட ஒரு சுற்று.
Share:

பட்டினியில்லா நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


வாஷிங்டன்: பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தப்பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பட்டினி
Share:

டெஸ்ட், மெர்சல் என்ற பெயரில் படம் வெளியாக தடை கோரிய வழக்கு! தீர்ப்பு இதோ


மெர்சல் படத்தின் தலைப்புகாக மெர்சலாயிட்டேன் படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது தயாரிப்பாளர் ராஜேந்திரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்ய, தற்போது அந்நீதிமன்றம் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் நடிகர் விஜய்யின் படம் மெர்சல் என்ற பெயரில் வெளியாவதில் தடை இல்லை எனவும், படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்ற தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் கருதி 41 தியேட்டர்களில் மெர்சல் படத்தை வெளியிட தடை கோரும் வழக்கில், மனுவை விசாரிக்க மனுதாரர் முறையிடாடததால் தீபாவளிக்கு பிறகு விசாரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
Share:

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அபார வெற்றி

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டங்களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் அணிகள் அபார வெற்றி பெற்றன.
கொல்கத்தா,
ஜப்பான் வீரர் நகமுரா ‘ஹாட்ரிக்’ கோல் போட்டார்.
17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2–வது சுற்றுக்குள் நுழையும்
3–வது நாளான நேற்று கொல்கத்தாவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து அணி, சிலியை எதிர்கொண்டது. இதில் தாக்குதல் பாணியை கையாண்ட இங்கிலாந்து பக்கமே (64 சதவீதம்) பந்து அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது. 5–வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹட்சன் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜாடோன் சஞ்சோ (51 மற்றும் 60–வது நிமிடம்), ஏஞ்சல் கோம்ப்ஸ் (81 நிமிடம்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் கோல்கள் போட்டனர். சிலியால் ஒரு பந்தை கூட இலக்கை நோக்கி அடிக்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 4–0 என்ற கோல் கணக்கில் சிலியை எளிதில் வீழ்த்தியது.
இதே போல் கவுகாத்தியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, அறிமுக அணியான நியூகலிடோனியாவை 7–1 என்ற கோல் கணக்கில் நொறுக்கியது. நியூகலிடோனியா அணியில் பெர்னர்ட் இவா, கியாம் வானிஸ்சி ஆகியோர் சுயகோல் அடித்தது கூடுதல் பரிதாபமாகும்.
இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 6–1 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராசை ஊதித்தள்ளியது. ஜப்பான் வீரர் நகமுரா (22, 30, 43–வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் பதிவான முதல் ‘ஹாட்ரிக்’ இது தான்.
ஈராக்–மெக்சிகோ இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 0–3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2–வது லீக்கில் இன்று (இரவு 8 மணி) கொலம்பியாவுடன் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.

உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்திருக்கும் இந்தியாவுக்கு முதல் ஆட்டத்தை போன்றே இதுவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘கொலம்பியா கடுமையான போட்டி கொடுக்கக்கூடிய ஒரு அணி. அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று இந்திய பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாட்டோஸ் குறிப்பிட்டார்.

இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி காண வேண்டும், குறைந்தது ‘டிரா’வாவது செய்ய வேண்டும். இதே போல் தனது தொடக்க ஆட்டத்தில் கானாவிடம் 0–1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கொலம்பியாவும் இதே நெருக்கடியில் தான் உள்ளது. இன்றைய மற்ற ஆட்டங்களில் கானா–அமெரிக்கா (மாலை 5 மணி), துருக்கி–மாலி (மாலை 5 மணி), பராகுவே–நியூசிலாந்து (இரவு 8 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
Share:

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடங்கியது: அமெரிக்காவிடம் இந்திய அணி தோல்வி

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் மோசமான தோல்வியை தழுவியது.
புதுடெல்லி,

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் மோசமான தோல்வியை தழுவியது.

17-வது ஜூனியர் உலக கோப்பை (17 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.



இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான இந்தியா, அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. அனுபவம் வாய்ந்த அமெரிக்க வீரர்கள் எதிர்பார்த்தது போலவே தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். 30-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜிதேந்திர சிங் அமெரிக்க கேப்டன் ஜோஷ் சர்ஜென்ட்டை, கோல் பகுதியில் வைத்து பிடித்து இழுத்ததால் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. பெனால்டியை அமெரிக்க கேப்டன் ஜோஷ் சர்ஜென்ட் எளிதில் கோலாக்கினார்.

தொடர்ந்து அமெரிக்க வீரர்களின் பக்கமே பந்து அதிகமாக (57 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரம் அரங்கை அதிர வைத்தாலும் இந்திய வீரர்களால் அமெரிக்காவின் கோல்பகுதிக்குள் அவ்வளவு எளிதில் ஊடுருவ முடியவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே இலக்கை நோக்கி ஷாட் அடித்தனர். அதற்கும் பலன் கிட்டவில்லை.

அதே சமயம் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்திய அமெரிக்கா மேலும் இரு கோல்களை திணித்தது. கிறிஸ் டர்கின் 51-வது நிமிடத்திலும், ஆண்ட்ரூ கார்ல்டென் 84-வது நிமிடத்திலும் கோல் போட்டு அதிர்ச்சி கொடுத்தனர். ‘உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் கோல் அடித்த முதல் இந்தியர்’ என்ற அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை இந்திய இளம் படையால் ஒரு கோல் கூட திருப்ப இயலவில்லை. முடிவில் அமெரிக்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. இந்திய கோல் கீப்பர் தீரஜ் சிங், சில கோல் வாய்ப்புகளை முறியடித்தார். இல்லாவிட்டால் அமெரிக்கா மேலும் சில கோல்களை அடித்திருக்கும்.

முன்னதாக இதே மைதானத்தில் நடந்த தொடக்க லீக்கில் முன்னாள் சாம்பியன் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது. கானா வீரர் சாதிக் இப்ராகிம் 39-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.

மும்பையில் நடந்த நியூசிலாந்து- துருக்கி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. துருக்கி வீரர் அகமது குடுச்சு 18-வது நிமிடத்திலும், நியூசிலாந்து கேப்டன் மேக்ஸ் மாட்டா 58-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். கடைசி நேரத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற மேக்ஸ் மாட்டா களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக அடுத்த லீக் ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது.

இன்னொரு ஆட்டத்தில் பராகுவே அணி 3-2 என்ற கோல் கணக்கில் மாலியை வீழ்த்தியது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனி-கோஸ்டாரிகா (கோவா, மாலை 5 மணி), பிரேசில்-ஸ்பெயின் (கொச்சி மாலை 5 மணி), ஈரான்-கினியா (கோவா, இரவு 8 மணி), வடகொரியா-நைஜர் (கொச்சி, இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ், சோனி டென்-2, சோனி டென்-3 ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
Share:

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈரான் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில், ஈரான் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
கொச்சி,

17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2-வது சுற்றுக்குள் (நாக்-அவுட்) நுழையும்.

ஸ்பெயின், பிரேசில் அபாரம்

5-வது நாளான நேற்று கொச்சியில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி, நைஜரை எதிர்கொண்டது. இதில் ஆக்ரோஷம் காட்டிய ஸ்பெயின் 4-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான நைஜரை புரட்டியெடுத்தது. ஸ்பெயின் அணியில் அபெல் ருய்ஸ் 21-வது மற்றும் 41-வது நிமிடத்திலும், சீசர் 45-வது நிமிடத்திலும், செர்ஜியோ கோமெஸ் 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் தோல்வி கண்ட ஸ்பெயின் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

கோவாவில் நடந்த கோஸ்டாரிகா-கினியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இரவில் ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மூன்று முறை சாம்பியனான பிரேசில் அணி, வடகொரியாவுடன் மோதியது. இதில் அனுபவம் வாய்ந்த பிரேசில் அணி ஷாட்டுகளை அடிப்பதிலும், பந்தை கட்டுப்பாட்டில் (70 சதவீதம்) வைத்திருப்பதிலும் ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. பிற்பாதியில் பிரேசில் வீரர்கள் லின்கான் (56-வது நிமிடம்), பாலினோ (61-வது நிமிடம்) கோல் போட்டு 2-0 என்ற கணக்கில் வெற்றியை தேடித்தந்தனர். 2-வது வெற்றியை பெற்ற பிரேசில் அணி இதன் மூலம் அடுத்த சுற்றை உறுதி செய்தது.

ஜெர்மனி தோல்வி

சி பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் ஈரான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை துவம்சம் செய்தது. யூனஸ் டெல்பி (6, 42-வது நிமிடம்), சயாத் (49-வது நிமிடம்), வாஹித் நம்டாரி (75-வது நிமிடம்) ஆகியோர் ஈரான் அணியின் ‘கோல்’ நாயகர்களாக வலம் வந்தனர். 2-வது வெற்றியை புசித்த ஈரானும் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்-ஜப்பான் (மாலை 5 மணி), இங்கிலாந்து-மெக்சிகோ (மாலை 5 மணி), ஹோண்டுராஸ்-நியூகலிடோனியா (இரவு 8 மணி), ஈராக்-சிலி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 
Share:

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தியது இங்கிலாந்து

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி முன்னாள் சாம்பியன் மெக்சிகோவை 3-2 என்ற கோல் கணக்கில் பதம் பார்த்தது.
புதுடெல்லி,

17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக லீக்கில் மோதுகின்றன.

முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில் கவுகாத்தியில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் (இ பிரிவு) ஜப்பானை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அடுத்த சுற்றை உறுதி செய்தது. இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான நியூகலிடோனியாவை ஊதித்தள்ளியது.

கொல்கத்தாவில் அரங்கேறிய ‘எப்’ பிரிவு லீக்கில் 2 முறை சாம்பியனான மெக்சிகோ, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆக்ரோஷமான பாணியை கையாண்ட இங்கிலாந்து வீரர்கள் மெக்சிகோ அணியை தடுமாற வைத்தனர். 39-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரையான் பிரேவ்ஸ்டர் ‘பிரிகிக்’ வாய்ப்பில் 23 மீட்டர் தூரத்தில் இருந்து சூப்பராக ஒரு ஷாட் அடித்து பந்தை வலைக்குள் தள்ளினார். பிற்பாதியில் போடென் (48-வது நிமிடம்), ஜாடோன் சாஞ்சோ (55-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு இங்கிலாந்துக்கு 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை ஏற்படுத்தி தந்தனர்.

அதன் பிறகு மெக்சிகோ வீரர் டியாகோ லைனிஸ் (65 மற்றும் 72-வது நிமிடம்) இரட்டை கோல் அடித்தாலும் இங்கிலாந்தின் ‘வீறுநடை’யை தடுக்க இயலவில்லை.

திரிலிங்கான ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை சாய்த்து 2-வது வெற்றியை ருசித்ததுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. அதே சமயம் தனது முதல் லீக்கில் ஈராக்குடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்த மெக்சிகோவுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஈராக் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலிக்கு அதிர்ச்சி அளித்தது.
Share:

உலக கோப்பை கால்பந்து: மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி தகுதி

மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
குய்டோ,
அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிசுற்றின் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா-ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஈகுவடாரில் உள்ள குய்டோவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் அர்ஜென்டினா களம் கண்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கிய 38-வது வினாடியிலேயே ஈகுவடார் கோல் போட்டு வியப்பூட்டியது. அந்த அணி வீரர் ரொமாரியோ இபரா இந்த கோலை அடித்தார்.
உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துக்கு 11-வது நிமிடத்தில் அர்ஜென்டினா பதிலடி கொடுத்தது. டி மரியா தட்டிக்கொடுத்த பந்தை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி லாவகமாக அடித்து கோலாக்கினார். மெஸ்சியை குறி வைத்து ஈகுவடார் வீரர்கள் செயல்பட்டாலும், அவர்களின் வியூகங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிய மெஸ்சி 18-வது மற்றும் 62-வது நிமிடங்களிலும் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். தனது கால்பந்து வாழ்க்கையில் மெஸ்சியின் 44-வது ‘ஹாட்ரிக்’ இதுவாகும்.
எதிர்பார்ப்பையும், நெருக்கடியையும் சமாளித்து மெஸ்சி கோல் அடித்த விதம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை தோற்கடித்தது. 18 லீக் ஆட்டங்கள் முடிவில் அர்ஜென்டினா அணி 7 வெற்றி, 7 டிரா, 4 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 3-வது இடம் பிடித்ததுடன் உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.
இந்த பிரிவில் இருந்து உருகுவே, கொலம்பியா அணிகளும் உலக கோப்பை வாய்ப்பை பெற்றுள்ளன. முதலிடத்தை பிடித்த பிரேசில் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.
வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டலத்துக்கான தகுதி சுற்று ஒன்றில் டிரினிடாட் அண்ட் டொபாக்கோவுக்கு எதிராக டிரா செய்தாலே போதும் என்ற நிலையில் களம் இறங்கிய அமெரிக்கா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்று உலக கோப்பை வாய்ப்பை இழந்து வெளியேறியது.
2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இதுவரை போட்டியை நடத்தும் ரஷியா உள்பட 23 நாடுகள் தகுதி பெற்று இருக்கின்றன. இன்னும் 9 அணிகள் தகுதி பெற வேண்டி இருக்கிறது.
Share:

கிரிக்கட் ரசிகர்களை உற்சாகமளிக்கப் போகும் T10 கிரிக்கட்



கிரிக்கட் ரசிகர்களை உற்சாகமளிக்கப் போகும் T10 கிரிக்கட் தொடர் இவ்வருடத்தில்
கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக ஏற்படும் பல மாற்றங்களால் பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட் பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் பெற்று வருகின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் T-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் தற்போது அதிரடியாக T-10 போட்டிகளை நடாத்த களம் காண ஆயத்தமாகவுள்ளது.
10 ஓவர்கள், 7 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேர எல்லைக்குள் 4 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடர், கிரிக்கெட் உலகின் அதிரடி நட்சத்திரங்களான சஹீட் அப்ரிடி, குமார் சங்கக்கார, கிறிஸ் கெயில், விரேந்தர் செவாக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஐக்கிய அரபு இராட்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இவ்வருட டிசம்பர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளத
உலகின் தலை சிறந்த 50 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல புதிய வீரர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகவுள்ள இப்போட்டித் தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடர்களை நடாத்திய பெருமையயைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
விறுவிறுப்பான இத்தொடரின் ஒவ்வொறு போட்டியிலும் உலகின் பல்வேறு நாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது பிரம்மாண்டமான ஆரம்ப நிகழ்வுகள், நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பல மாற்றங்களுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபிஸ், பக்தூன்ஸ், மராத்தா, பங்லாஸ், லங்கன்ஸ், சிந்திஸ் மற்றும் கேரலைடிஸ் என ஏழு அணிகளின் பங்குபற்றுதலுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தருணம் வரை பக்தூன்ஸ் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பங்லாஸ் அணித் தலைவராக சகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏனைய அணிகளுக்கான வீரர்கள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள ஏலத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
T-10 கிரிக்கெட் தொடரின் தலைவரும் ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபையின் உறுப்பினருமான சஜீ உல் முல்க் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ‘இப்போட்டிகளை நடாத்துவது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். T-10 தொடர் கிரிக்கெட்டின் அடுத்த கட்டமாகும். T-20 போட்டிகள் நமக்கு தரும் மகிழச்சியைப் போல T-10 தொடரும் இருக்கும்‘ எனத் தெரிவித்தார்
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சஹீர் அப்பாஸ் கருத்துத் தெரிவிக்கையில் ‘இது கிரிக்கெட் உலகின் நேரத்துக்குள் 90 நிமிடங்கள் உள்வாங்கப்பட்ட தருணமாகும். இது கிரிக்கெட்டின் அடுத்த கட்ட நகர்வகும்‘ எனத் தெரிவித்தார்.
Share:

புதிய கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் -ரோஹித்த போகொல்லாகம- கௌரவ ஜனாதிபதி மைத்திபால சிரிசேன அவர்களால் 04.07.2017 நியமனம்
= இலங்கை ஊடகங்கள்
Share:

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற பல மரணங்களின் மர்மங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

.
நோயாளிகளாகச் செல்லும் பலர் பிரேதமாக வெளியே வந்த ச
கடந்த 06.05.2015 அன்று பிரபல பாடசாலை அதிபர் ஒருவரின் துணைவியார் பெண்ணியல் தொடர்பாக சிகிச்சைக்குச் சென்றபோது அவருக்கு முறையற்ற சத்திரசிகிச்சை செய்து உடல்முழுவதும் கிருமிகளைப் பரவச் செய்து கொலைசெய்துள்ளார்கள்.
செயர்க்கையாக அவரை ஐந்து நாட்கள் உயிருடன் இருப்பதுபோலக்காட்டி கணவரைக் கொண்டு பல பரிசோதனைகளை பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்களுக்குச் செய்வித்து 6ஆந்திகதி பிணமாகக் கையளித்துள்ளார்கள்.
இது பற்றி திருகோணமலை முழுவதும் கதைகள் பரவத் தொடங்கியதும் பலரும் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தமக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தற்போது வெளியே கசிய விட்டுள்ளனர். அவை தொடரச்சியாக வெளிவரவுள்ளன.
திருகோணமலை வைத்தியசாலைக்குச் சென்றால் சாவே நிகழும் என கூறுகின்றனர்.
இதுபற்றி அங்குள்ளவர்களிடம் விசாரித்தால் வசதிகள் போதாமையே காரணம் என்று கூறுகின்றனர்.
ஒன்றிருக்க ஒன்றை அறுத்து அநியாயம் செய்யும் இவர்களில் பலர் சிற்றூழியர்கள் உட்பட நீண்டகாலமாக இதனையே செய்துவருவதாக பிரதேசத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
வேடிக்கை என்னவென்றால் சத்திரசிகிச்சை செய்யப்படுகின்ற நோயாளியிடமே ஒப்புதல் கையொப்பத்தை பெற்றுவிட்டு சத்திரசிக்கிச்சை செய்து கொலைசெய்கின்ற நடைமுறையும் புதுமையாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இராணுவ ரீதியாக நடைபெற்ற கொலைகள் ஒருபுறம், போதைவஸ்துகளைப் பரப்பி செய்யப்படகின்ற அழிப்புகள் இன்னொருபுறம், இப்போது மருத்துவரிதியாக செய்யப்படுகின்ற அழிப்புகள் என தமிழர் வாழ்வில் நீண்டுசெல்லும் கொலைப்படலமே என பலரும் கலங்கி நிற்கின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலைக்குச் செல்வதற்கு அஞ்சி பல லட்சரூபாக்களைச் செலவழித்து மக்கள் அலைந்து திரியும் நிலை திருகோணமலையில் உரவாகியுள்ளது.
Share:

ஐந்தாம் தர வகுப்புகளை கொண்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கான அவசர அறிவித்தல்!

ஐந்தாம் தர வகுப்புகளை கொண்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கான அவசர அறிவித்தல்!



புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுடைய படங்களை ‘ பெனர்’ மூலம் காட்சிபடுத்தவேண்டாம் என கல்வி அமைச்சு ஐந்தாம் தர வகுப்புகளை கொண்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
5ம் ஆண்டு புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை பாடசாலைகளில் ‘பெனர் ‘ மூலமாக காட்சிப்படுத்தவேண்டாம் என கல்வி அமைச்சு அவசர சுற்றறிக்கையினை நேற்று (06.10.2017) வெளியிட்டுள்ளது.
இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளின் புகைப்படங்களை பெனர்கள் மூலம் காட்சிப்படுத்துவதனால் சித்திபெறத் தவறிய பிள்ளைகளின் மன நிலை பாதிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும்
Share:

மட்டக்களப்பு சந்திவெளி கிரான் கிராமத்தில் காணப்படுகின்ற அரச காணிகளை சட்ட விரோதமான முறையில் தமதாக்கிக் கொண்டிருக்கும் இராசமாணிக்கம் பௌண்டேசன்






#மட்டக்களப்பு சந்திவெளி கிரான் கிராமத்தில் காணப்படுகின்ற அரச காணிகளை சட்ட விரோதமான முறையில் தமதாக்கிக் கொண்டிருக்கும் #இராசமாணிக்கம் பௌண்டேசன் பணிப்பாளும் ஸ்ரீலங்கா #சுதந்திரக் கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், தற்போதைய ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய ராசபுத்திரன் #சாணக்கியன் என்பவருக்கு எதிராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபில் #நசீருக்கு #எதிராகவும் சந்திவெளி பாலையடித்தோணா கிராம மக்களால், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர், மற்றும் #ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரதிகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.
#எமது ஏனைய தமிழ் பிரதேச இளைஞர்களே நீங்களும் உங்கள் பகுதிகளில் #இடம்பெறும் #சட்டவிரோதமான காணி அபகரிப்புக்கள் தொடர்பாக துரிதகதியில் #அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்
Share:

மாட்டினான் மன்தச்சோனி இஸ்லாமியன்



மட்டகளப்பு lions club road இல் வீடொன்றின் (வாடகைக்கு விடப்பட்ட ஒரு ஆசிரியைக்குச் சொந்தமான வீடு) விபச்சார காம லீலையில் ஈடுபட்ட
#மொகமட்_கில்மி_அப்துல்_ரசாக் எனும் வைத்தியத் தொழில் செய்யும் சம்மாந்துறையைச் சேர்ந்த சோனியை கையும் களவுமாக எமது தமிழ் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டான்.
பொலிசார் தலையிட்டு கயவனை பாதுகாப்பாக தப்பிச்செல்ல விட்டுள்ளனர்.

மட்டக்களப்பயில் நாளாந்தம் இந்தச்சோனிகளால் எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்படுகிறது நாமும் முடிந்தவரை அவற்றை வெளிக்கொண்டு வந்து கொண்டே இருக்கிறோம், இருப்பினும் எம் தமிழ் மக்கள் விழிப்படைவதாகவோ உணர்ந்துகொள்வதாகவோ இல்லை ...
பிரச்சனை ஒன்று வந்து பட்ட பின்புதான் உங்களுக்கான பாதிப்பு விளங்கும்...
நடுத்தமிழ் ஊருக்குள் பணத்துக்காக வீட்டை வாடகைக்கு கொடுத்து இந்தச்சம்பவத்திற்கு உடந்தையாகியிருக்கிறது ஒரு ஆசிரியை குடும்பம்.
இது நேற்று மட்டும் நடைபெற்ற முதல் சம்பவமல்ல
இது தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது மன்மதன் கில்மி நேற்றைய தினம்தான் வசமாக மாட்டியிருக்கிறான். அந்த சம்பவங்கள் ஏற்கனவே வீட்டு உரிமையாளருக்கு தெரிந்திருக்கிறது என்பது எமது இளைஞர்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது,
இந்தக்காமச்சோனி கூப்பிட்டவுடன் அவனுடன் படுக்கச்சென்றவள் எப்படிப்பட்டள்!!!
விரைவில் உங்கள் தகவலும் வெளியிடப்படும்...
பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு..
ஒரு சமூகத்தின் இருப்பு மற்றும் ஒழுக்கம் மற்றும் கலாசாரத்தை நிலைநிறுத்துவற்காக ஒருவர் அல்லது ஒரு குடும்பத்தை களையெடுப்பதும் சமூக நியதிதான்.
இவ்வாறு கூட்டிக்கொடுக்கும் தமிழ்ப் பன்னாடைகளே, திருந்துங்கள் அல்லது தற்கொலை செய்து கொள்ளுங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.
Share:

பதவி ஆசை யாரை விட்டது ?

#பதவி ஆசை யாரை விட்டது ?







#எதிர்க்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்படட ஆசனத்தில் #நசீர்!
எதிர்கால எதிர்கட்சி தலைவராகும் எண்ணத்தில் எடுக்கப்படட #ஒத்திகையாக இருக்குமோ?
Share:

அரசாங்கத்தினால் கற்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுகளின் நிலுவைகளுல் பாரிய மோசடி.






ஒருவருக்கு வழங்கப்பட்ட இந்த உலர் உணவு பொருட்களில் 100g குறைவாக உள
இது சாதாரண விடயம் என்று அசமந்தப்போக்குடன் இருந்து விட முடியாது. இது மக்களின் வரிப்பணம். வாங்கும் அனைத்து பொருட்களிக்கும் அரசாங்கத்தினருக்கு வரி செலுத்தி வருகின்றனர்.
இது திட்டமிடப்பட்டு நடத்தப்படும் பகல் கொள்ளை.
வாழைச்சேனை CO-OP கற்பிணிப் பெண்களுக்கு கொடுக்கும் உணவு வகைகள்
1) பருப்பு 2kg
2) கெளபி 1kg
3) பயறு 1 kg
4) மீன் டின் 2
5) நெத்தலி 500g
6) அரிசி 4kg
இவ்வளவு சாமானுக்கும் அரசாங்கத்தால் 2000 ஆயிரம் ரூபாய் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால் இதிலே சரியான அளவுகள் இல்லை இது பொய் என்றால் இந்த முத்திரைக்கு சாமான்கள் வாங்கிய சகோதர&சகோதரிகள் அளவு செய்து பாருங்கள் அரசாங்கம் எமது கற்பினி தாய்மார்களுக்கு கொடுக்கும் போசாக்கு உணவு திட்டத்தில் இருந்து
இந்த திருடர்கள் திருடுகிறார்கள்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வாழைச்சேனை CO-OP முகாமையாளரிடம் பணிவாக கேட்டுக் கொள்கிறோம்.
Share:

இதயம் மாற்றம் செய்ய சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு

களுவாமோதர பிரதேசத்தை சேர்ந்த சச்சினி செவ்வந்தி
என்ற பெண் 27 ம் திகதி அன்று கண்டி போதனாவைத்திய சாலையில் விபத்தில் இறந்த ஒருவரின் இதயத்தினை தனக்கு மாற்றி சிகிச்சை பெற்று இருந்தார் இருப்பினும் வைத்தியரின் தவரால் உயிரிழந்தனார் இது காரணமாக வைத்தியரிடம் போலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர் வைத்தியரின் கவனக்குறைவோ இஉயிரிழக்க காரணம்
Share:

Popular Posts

SATHISPRIYAN. Blogger இயக்குவது.

BLOG EDITOR

SATHISPRIYAN

இந்த வலைப்பதிவில் தேடு

Blog Archive

BKS NEWS APP DOWNLOAD

Popular Posts

BKS NEWS ALL

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.